ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.. பிரணாப் முகர்ஜி வேதனை.. குணமடைய பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

pranab

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவலை அறிந்து மன வேதனையுற்றேன். முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்ர் ஜே.பி. நட்டா

இதேபோல மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+