கோவை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

டெல்லியில் இருந்து கோழிக்கோட்டில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர், தனி விமானம் மூலம் கோவை வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் சுமார் 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.

Prime Minister leaves from kovai

பின்னர், பீளமேடு பகுதியில் கொடீசியா மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி. இதையடுத்து கோவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பிரதமரின் கோவை பயணத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+