ஓகி பாதிப்பை "போட்டோ கண்காட்சியில்" பார்த்து 'ஆய்வு செய்த" பிரதமர் கொடுமை!
ஓகி புயல் பாதிப்பை பிரதமர் மோடி நேரில் பார்க்காததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயல் பாதிப்பை பிரதமர் மோடி நேரில் பார்க்காததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி போட்டோக்களில் மட்டுமே பார்த்தார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலே கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடியது. இதில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்தன.
புயலுக்கு முன்பு கரைக்கு சென்ற 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

20 நாட்களுக்கு பிறகு வருகை
இந்நிலையில் புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி 20 நாட்களுக்கு பிறகு இன்று வந்தார். கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஓகி புயல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

போட்டோக்கள் மூலம் விளக்கம்
அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டோக்களை காண்பித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார். புயல் சேதம் குறித்த குறும்படமும் பிரதமர் மோடிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

நேரில் சென்று பார்க்கவில்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளையோ பிரதமர் நேரில் சென்று பார்க்கவில்லை. புயல்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மோடி நேரில் சென்று பார்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறைகளை கேட்டறிந்தார்
கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களிடம் புயல் பாதிப்பு குறித்து மோடி கேட்டறிந்தார்.

மீனவர்களை மீட்க கோரிக்கை
அப்போது ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டு தர வேண்டும் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் புயலால் சேதமடைந்த விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications