தன் நாக்கை தானே கடித்துக் கொண்ட கைதி – காரணம் தெரியாமல் அதிகாரிகள் முழிப்பு
நாகை: நாகர்கோவில் ஜெயிலில் தனக்கு தானே நாக்கை கடித்து கைதி செய்த ரகளையால் ஜெயில் அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் விஜயகுமார்.
கடந்த 8 ஆம் தேதி ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்த இவருக்கும், மருத்துவமனை காவலாளி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது.

போலீஸார் கைது:
இதில் விஜயகுமார் தன்னை தாக்கியதாக காவலாளி சின்னதம்பி கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் விஜயகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அலறிய கைதி:
இந்தநிலையில், இன்று அதிகாலை 2.20 மணிக்கு விஜயகுமார் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது விஜய குமாரின் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தோடிய வண்ணம் இருந்தது.

நாக்கு போச்சே! :
ஜெயிலில் அதிகாரிகள் அறைக்குள் சென்று விஜயகுமாரிடம் என்ன நடந்தது என விசாரித்த போது அவர் தனக்கு தானே நாக்கு, மேல் உதட்டை பலமாக கடித்தது தெரிய வந்தது.

தீவிர சிகிச்சை:
உடனே ஜெயில் அதிகாரிகள் விஜய குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரகளையோ ரகளை:
மருத்துவமனையிலும் விஜயகுமார் கைவிலங்கை அவிழ்க்க முயன்றதோடு, சக நோயாளிகளை தாக்க முயன்று ரகளை செய்து வருவதாகவும், எனவே அவரை பாளையில் உள்ள ஜெயில் கைதிகளுக்கான மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் போலீஸ்:
மேலும், விஜயகுமார் திடீரென இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications