பெரிய அளவில் வெடிக்கும் போராட்டம்.... தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவு
செவிலியர்களின் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சென்னை : செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காவிட்டால் தாங்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடந்த மூன்று நாட்களாக டி.எம்.எஸ் வளாகத்தில் போராடி வருகிறார்கள். அமைச்சரிடம் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செவிலியர்களின் கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது என்று கைவிரித்து இருக்கிறது அரசு.

அதனால் இன்று காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக அறிவித்து போராடி வருகிறார்கள் செவிலியர்கள். இதுவரை எந்த ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நேரில் வந்து சந்திக்காத நிலையில் ,போலீஸார் அந்த இடத்தில் இருந்து செவிலியர்களை அப்புறப்படுத்த பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ள நிலையில், திமுக ராஜ்யசபா எம்.பி, கனிமொழி செவிலியர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். மேலும் , இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது செவிலியர்களின் இந்தப் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவளித்து உள்ளது. செவியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. செவிலியர்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில் அரசு தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் , தமிழகத்தில் மருத்துவத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications