மெரினா, அலங்காநல்லூர், வாடிப்பட்டி.. விடிய, விடிய தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்!
மதுரை: வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சென்னை மெரினா என தமிழகத்து ஜல்லிக்கட்டு போராட்ட களம் மூன்று இடங்களில் மையம் கொண்டுள்ளது. இந்த போராட்டங்கள் விடிய, விடிய தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே நேற்றிலிருந்து தொடர்ந்து 21 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் இன்று காலை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் வாபஸ்
இதில் முன்னதாக 48 பேர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது மேலும் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 157 பேர் மண்டபத்திலிருந்து வெளியேற சொல்லியும் மறுப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டும் கைவிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில், சென்னை மெரினா பீச் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பவர்களும் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரவு முழுக்க போராட்டத்தில் தொடர முடிவு செய்துள்ளனர். எனவே மெரினாபீச்சிலும் போராட்டம் விடிய விடிய தொடர உள்ளது.

போராட்ட களம்
அதேபோலத்தான் அலங்காநல்லூரிலும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனவே இன்று இரவு 2வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர உள்ளனர். தமிழகத்தின் மூன்று போராட்ட மையப்புள்ளி களங்களும் தகித்து கொண்டே உள்ளன.

ஒடுக்க முயற்சி
அதேநேரம் போராட்டத்தை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் அழைத்து அவர்களை மிரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. இருப்பினும் போராட்டங்கள் நிற்பதாக தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications