சகாயம் குழுவுக்கு ஆதரவாக மதுரையில் இயக்கம் தொடக்கம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கவுள்ள சகாயம் குழுவுக்கு ஆதரவாக மதுரையில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
சகாயம் தலைமையில் 15 பேர் கொண்ட குழு இந்த விசாரணையை நடத்தவுள்ளது. விரைவில் விசாரணை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மதுரையில் சகாயம் குழுவுக்கு ஆதரவாக இயக்கம் ஒன்றை முகிலன் என்பவர் தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கத்திற்கு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்த இயக்கத்தின் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வி்வரம்:
- கனிமவள முறைகேடுகளை விசாரணை செய்யும் சகாயம் குழுவினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உதவ வேண்டும்.
- சகாயம் ஆய்வுக்குழு தனது செயல்பாட்டை மிகவும் வெளிப்படையாக வைத்து இருக்க வேண்டும்.
- மக்கள் எளிமையாக குழுவினரை தொடர்பு கொள்ளும் பொருட்டு மின் அஞ்சல் முகவரி மற்றும் முகநூல் பக்கத்தினை தொடங்க வேண்டும்.
- கனிமவள முறைகேடுகள் மிகுதியாக நடந்த இடங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கிருட்டிணகிரி ஆகிய பகுதிகளுக்கு குழுவினர் நேரடியாக வந்து மக்களை சந்தித்து ஆய்வு செய்ய வேண்டும்.
- கனிமவள முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் அல்லாமல் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களின் உடல் நல பாதிப்புகள், குடிநீர், மின் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை செய்ய வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர் கனிமவள முறைகேடுகளை பற்றி தகவல் அளிக்கும் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- விசாரணையில் அந்தந்த பகுதிகளில் தங்கியிருந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் உரிய முறைகேடுகள் பற்றி அறிக்கைகள் தயார் செய்து பெற வேண்டும். அதில் தவறான தகவல்கள் விடப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications