மெரினாவில் கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கான பணிகள் தொடங்கின
மெரினாவில் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான பணிகள் தொடங்கின.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கான பணிகள் தொடங்கின- வீடியோ
சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து மெரினாவில் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
கருணாநிதியை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கருணாநிதிக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து திமுக நிர்வாகி துரைமுருகன் பொது பணி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கருணாநிதியின் சமாதி எங்கே அமைய வேண்டும் என்பது குறித்து திமுக சார்பில் திட்ட வரைப்படம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் குறிப்பிட்ட இடத்தில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும் செங்கற்களும் வந்திறங்கின. இந்த பணிகளை துரைமுருகன் மேற்பார்வை பார்த்து வருகிறார். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications