'கரண்ட்' இல்லை, அதனால்தான் 'பவர் கட்'... மின்தடைக்கு அதிகாரிகள் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

Production shortage causes power cut : TNEB
சென்னை: தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே 1,350 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன போது, அப்போதைய மின்பற்றாக்குறையை போக்க காற்றாலை மின்சாரம் ஓரளவு கைகொடுத்தது. தற்போது அதேபோன்று வடகிழக்கு பருவமழை நன்கு பெய்தால் நீர்மின்சார நிலையங்களிலும், காற்றாலைகளும் ஓரளவு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் மின்சார உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. அதேநேரம் குளிர் அதிகமாக இருப்பதால் தற்போது ஏசி, மின்விசிறி போன்ற மின்சாதனங்களின் பயன்பாடும் குறைந்திருப்பதால் மின்சாரத்தின் தேவையும் சற்று குறைந்துள்ளது.

புதிய மின்உற்பத்தி நிலையங்களும் வணிக உற்பத்திக்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டு, சோதனை ஓட்டத்திலேயே இருப்பதால் புதிய அனல்மின்நிலையங்களிலும் எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி இல்லாத நிலை இருந்து வருகிறது.

மின்உற்பத்தியை பொறுத்தவரையில் நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி 1,108 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அனல் மின்நிலையங்களில் 2,795 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. காற்றாலையை பொறுத்தவரையில் 15 மெகாவாட் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்தன.

மத்திய தொகுப்பு மற்றும் இதர வழிகளில் பெறப்பட்ட மின்சாரங்களை சேர்த்து 10 ஆயிரத்து 27 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டன. ஆனால் தேவை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே 1,350 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக மின்தடை செய்யப்பட்டுள்ளது''என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+