சென்னையில் ஆன்லைன் விபசாரம்: 2 பெண்கள் மீட்பு- 4 புரோக்கர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை போலீசார் மீட்டு நான்கு புரோக்கர்களை கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு காரில் வெளி மாநில அழகிகள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்காக 4 புரோக்கர்கள் வாடிக்கையாளர்களை தேடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் ஆந்திரா மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டனர்.

அங்கு நின்று கொண்டிருந்த 4 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன், இளையான்குடியை சேர்ந்த சுந்தரபாண்டியன், திண்டுக்கல்லை சேர்ந்த விஜயராகவன், சிவகங்கையை சேர்ந்த கணேசன் என்று தெரியவந்தது.

இவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தேடிப்பிடிப்பார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் கேட்கும் இடங்களுக்கு அழகிகளை கொண்டு ஒப்படைக்கிறார்கள்.

அதுபோல தற்போது வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்தபோதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு செயல்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+