யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்த ஈசாவுக்கு எதிராக போராட்டம்- சமூக நீதிக்கட்சினர் கைது!!
கோவை: கோவை ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகள் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மையத்தை முற்றுகையிட முயன்ற சமூக நீதிக்கட்சியினர் 30-பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஈசா யோகா மையம் இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், ஈசா பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், வன நிலங்களை ஈசா யோகா மையம் ஆக்கிரிமித்துள்ளதால் யானைகள் வழிதடம் மறிக்கப்பட்டு அவை உயிரிழப்பதாக சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக நேற்று ஈசா யோகா மையத்தை மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த சமூக நீதிக்கட்சியினர் முயன்றனர்.
அப்போது, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு இந்த முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம் என்றும், தற்போது ஈசா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள யானைகளின் வழித்தடங்களை மீட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், ஈசா மையத்தின் மீதான புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் வலியுறுத்தினர். இதனிடையே, ஈசா யோகா மையத்தை மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் செம்மேடு என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தலைமையில் ஈசா யோகா மையம் முன்பாக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ஈசா யோகா மையம் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்த போலிசார், அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யப்பட்டது. சமூக நீதிக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தாலும் ஏராளமான போலிசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications