வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை: தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார்.

இந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். நான் ஏற்கனவே வாங்கி இருந்த பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் இருந்தது. என் தந்தை இறந்த பின்பு பெற்ற ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் போன்றவற்றில் என் வளர்ப்பு தந்தை ஜெரால்டு ஞானரத்தினம் பெயர் உள்ளது.
இந்தநிலையில் என் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. இதனால் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படி மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். "ஏற்கனவே நான் பெற்ற பாஸ்போர்ட்டில் என் தந்தை பெயர் உள்ளது.
தற்போது நான் அளித்துள்ள விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் வளர்ப்பு தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோர்ட்டில் உரிய உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க முடியும்" என்று கூறி என் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அதிகாரி 19.7.2016 அன்று நிராகரித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications