இப்போ இது தேவையா.. திமுக ரயில் மறியல் போராட்டத்தால் மக்கள் அதிருப்தி!
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் அமைதியாக போராடி வரும் நிலையில் திமுகவினர் ரயிலை மறித்ததால் மக்கள் அதிருப்தியடைந்ததைக் காண முடிந்தது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஒருபக்கம் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான ரயில் மறியல் போராட்டம் திமுகவுக்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றுத் தர தவறி விட்டது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் இளம்பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து டெல்லி விரைந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்று கூறினார்.

போராட்டத்தை தொடரும் மாணவர்கள்
மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளுக்கு இடமில்லை
மாணவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடமில்லை என முழக்கமிட்டனர். இதையடுத்து ஸ்டாலின் போராட்டக்குழுவை சந்திக்காமல் திரும்பினார்.

திமுக ரயில் மறியல்
இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதால் திமுக தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தனியாக போராடிய திமுக
திமுகவின் இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்ததை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்தில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளாததால் மாணவர்களுக்கு போட்டியாக திமுக தனியாக போராட்டம் நடத்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் குற்றம்சாட்டினர்.

சென்னையில் மக்கள் அவதி
சென்னையில் ரயில்கள் மறிக்கப்பட்டதால் காலையில் அலுவலகம் சென்றோர் பெரும் அவதிக்குள்ளாகினர். மாணவர்களே அமைதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஏன் மக்களை சிரமப்படுத்துகின்றனர் என்று அவர்கள் கூறியது திமுகவினர் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications