ஆளுநர் ஆய்வு தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு... சொல்கிறார் எச் ராஜா!
மற்ற மவாட்டங்களிலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: மற்ற மவாட்டங்களிலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றர்.

ஆனால் தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். ஆளுநர் ஆய்வு செய்ததால் தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அரசிடம் பேச முடியும் என அவர் தெரிவித்தனர்.
தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என மேதகு ஆளுநர் கூறியுள்ளார். தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு.
— H Raja (@HRajaBJP) November 16, 2017
இந்நிலையில் தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என ஆளுநர் கூறியுள்ளதாக எச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆய்வு தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு என்றும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications