புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்: முட்புதர்களில் சிதறியுள்ள கற்சிலைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
அரசு அருங்காட்சியகத்தை உடனடியாக பராமரித்து சிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கிபி 2 மற்றும் 3ம் நூற்றாண்டு கால சிறப்பு வாய்ந்த 100க்கும் மேற்பட்ட கற்சிலைகள் பாதுகாப்பில்லாமல் முட்புதர்களில் கிடப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் என்பது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமைக்கு உரியது. நூற்றாண்டு கால அருங்காட்சியகத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள் ஆங்கிலேயர் மற்றும் மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய அரிய வகை போர்கருவிகள் மற்றும் பொருட்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிதறிக் கிடக்கும் முட்புதர்கள்
மேலும் பலவித பறவைகள் விலங்கினங்கள் ஆகியவையும் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் கிபி.2 மற்றும் 3ம் நூற்றாண்டு காலங்களில் கால கற்சிலைகள் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 100க்கும் மேற்பட்ட கிபி.2ம் நூற்றாண்டு கால கற்சிலைகள் தற்போது தகுந்த பாதுகாப்பு இல்லாமல் முற்புதர்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

கலைநயத்துடன் சிலைகள்
இவை அனைத்துமே தமிழகம் முழுவதும் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதனாலும், இவைகளை தமிழக அரசு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலும் வழங்கப்பட்டது. மேலும் கற்சிலைகள் மிகவும் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.

புதர்களில் சிலைகள்
பல சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்தும் உடைந்தும் போய் உள்ள நிலையில் முட்புதர்களில் வீசி எறியப்பட்டுள்ளது. இது வரலாற்று ஆய்வாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருங்கால சந்ததியினர் இளம் தலைமுறையினர் நமது நாட்டின் பழக்கவழக்கங்கள் வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்லாது பழங்கால பொருட்கள் சிலைகள் சின்னங்கள் ஆகியவற்றை இது போன்ற அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும்.

உடனடி பராமரிப்பு அவசியம்
எனவே தமிழக தொல்லியல்துறை சார்பில் இந்த சிலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அருங்காட்சியத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலத்தவர்களும் வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் அருங்காட்சியகத்தின் சிறப்பு குறித்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களின் விளக்கம் தருவதற்கு ஏதுவாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications