காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்-14 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திண்டுக்கல் மற்றும் நெல்லையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லையில் செல்போன் டவர் மீது ஏறி 14 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் காவிரி வாரியம் கோரி டவரில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications