கட்டி 3 மாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள உடைஞ்சு மண்ணா போச்சே!
புதிதாக கட்டிய பாலம் சேதமாகிவிட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு: "இந்த பாலம் கட்டி 3 மாசம் கூட முழுசா முடியல... அதுக்குள்ளே இப்படி எல்லாம் உடைஞ்சி மண்ணா போச்சு" என்கின்றனர் ஈரோடு கிராம மக்கள்.
நம்பியூர் அருகே உள்ளது அம்பேத்கர் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் தண்ணீர் இருந்தால் மாற்று பாதைகூட கிடையாது.
[ உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கேற்ற கமல்! ]

தார்சாலை
அதனால் ஓடையை கடக்க ஒரு பாலம் வேண்டும் என்று அந்த காலனி மக்கள் ரொம்ப காலமாகவே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் மற்றும் தார் சாலையும் அமைக்கப்பட்டது. அதாவது தார்சாலை அமைக்க 20 லட்சம் ரூபாயும், பாலத்திற்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

உபரி நீர்
இந்த பாலம் வந்தவுடன் மக்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் அந்த மகிழ்ச்சியும் அவர்களுக்கு தங்கவில்லை. தற்போது நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பிவிட்ட நிலையில், அதன் உபரி நீர் இந்த காலனி இருக்கும் ஓடை வழியாக வந்துவிட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி
மழை நீரின் வேகத்திற்கு, புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலைகள் மளமளவென இடிந்து விழுந்தது, அந்த நீரிலேயே அடித்துச் செல்லப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்தது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சீரமைக்க வேண்டும்
"பாலம் கட்டி முழுசா 3 மாசம்கூட ஆகவில்லை, ஒரு மழைக்கே இப்படி ஆயிடுச்சே" என்று காலனி மக்கள் குமுறுகின்றனர். இதனால் தங்களுக்கு உடனடியாக பாலத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications