கட்டி 3 மாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள உடைஞ்சு மண்ணா போச்சே!
புதிதாக கட்டிய பாலம் சேதமாகிவிட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு: "இந்த பாலம் கட்டி 3 மாசம் கூட முழுசா முடியல... அதுக்குள்ளே இப்படி எல்லாம் உடைஞ்சி மண்ணா போச்சு" என்கின்றனர் ஈரோடு கிராம மக்கள்.
நம்பியூர் அருகே உள்ளது அம்பேத்கர் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் தண்ணீர் இருந்தால் மாற்று பாதைகூட கிடையாது.
[ உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கேற்ற கமல்! ]

தார்சாலை
அதனால் ஓடையை கடக்க ஒரு பாலம் வேண்டும் என்று அந்த காலனி மக்கள் ரொம்ப காலமாகவே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் மற்றும் தார் சாலையும் அமைக்கப்பட்டது. அதாவது தார்சாலை அமைக்க 20 லட்சம் ரூபாயும், பாலத்திற்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

உபரி நீர்
இந்த பாலம் வந்தவுடன் மக்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் அந்த மகிழ்ச்சியும் அவர்களுக்கு தங்கவில்லை. தற்போது நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பிவிட்ட நிலையில், அதன் உபரி நீர் இந்த காலனி இருக்கும் ஓடை வழியாக வந்துவிட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி
மழை நீரின் வேகத்திற்கு, புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலைகள் மளமளவென இடிந்து விழுந்தது, அந்த நீரிலேயே அடித்துச் செல்லப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்தது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சீரமைக்க வேண்டும்
"பாலம் கட்டி முழுசா 3 மாசம்கூட ஆகவில்லை, ஒரு மழைக்கே இப்படி ஆயிடுச்சே" என்று காலனி மக்கள் குமுறுகின்றனர். இதனால் தங்களுக்கு உடனடியாக பாலத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications