சென்னை, மதுரையைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் போராட்டம் வாபஸ் !
புதுச்சேரியில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை: சென்னை, மதுரையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் புதுவையில் 7 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டாவை இந்தியாவில் தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிர் மற்றும் பனியில் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அறவழியில் நடத்தி வந்தனர்.

போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு . ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் எனக் கூறி அதனை ஏற்க மறுத்து பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. இதற்கிடையே தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் நேற்று சரமாரி தடியடி நடத்தினர். இதையடுத்து பல இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் நேற்று மாலையில் நடந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் அவசர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வேண்டும், பீட்டாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நேற்றும் மாணவ, மாணவியர், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் சென்னை, மதுரையில் நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து புதுவையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
புதுச்சேரியில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவி்ததுள்ளார். மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications