மெர்சலில் விஜய் சொல்வது நியாயம்தானே? - சொல்கிறார் புதுவை முதல்வர் - வீடியோ
பாஜக அரசால் எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மெர்சல் படம் விவகாரத்தில் உறுதியாகியுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜிஎஸ்டி பற்றியும் மெர்சல் படத்தில் விஜய் சரியாகத்தான் கூறியுள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பாஜக ஆட்சியில் பத்திரிகை, ஊடகம், திரைத்துறை சுதந்திரம் கேள்விக்குறியாகிவிட்டது. இச்சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்பது மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேலும் ஜிஎஸ்டியால் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களில் வரும் வசனங்கள் குறித்து பாஜக அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜிஎஸ்டியை நானும் தான் எதிர்க்கிறேன் என் மீதும் வழக்கு போடுவார்களா ?
இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எச்.ராஜா இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.