தயார் நிலையில் புதுவை சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் - சந்தீப் சக்சேனா தகவல்
புதுவை: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே மாதத்துக்குள் சட்ட மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் புதுவை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாநில தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு, மாவட்ட தேர்தல்அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சக்சேனா புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications