டெங்குவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கை கோர்க்க வேண்டும் - கிரண்பேடி - வீடியோ
டெங்குவை ஒழிக்க மத்திய அரசுடன் மாநில அரசு கைகோர்க்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: டெங்குவை தடுக்க புதுச்சேரி அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய நிலையில் ஆளுநர் கிரண்பேடி அதுகுறித்த விழிப்புணர்வுக்காக நடைபயணம் மேற்கொண்டார்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ஏராளமான மாணவ, மாணவிகள் நடைபயணமாக வந்தனர். ஆளுநர் மாளிகையில் துவங்கிய ஊர்வலம் செஞ்சில் சாலை, முத்தியாள்பேட்டை, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் சென்ற மாணவ, மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். சில தினங்களுக்கு முன் டெங்குவை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு தவறிவி்ட்டதாக ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியிருந்தார்.
மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும் என்றும் கூறினார் கிரண்பேடி.












Click it and Unblock the Notifications