விஐபிகளின் கார்களில் சைரன் பயன்படுத்த தடை: கிரண் பேடியின் அடுத்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் விஐபிகள் தங்கள் கார்களில் சைரன் பயன்படுத்த அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கடந்த 29ம் தேதி பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி. திகார் சிறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த அவர் தற்போது புதுச்சேரியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அவரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சைரன்

சைரன்

விஐபிகளின் கார்கள் சென்றாலே சைரன் ஒலி காதை கிழிக்கும். இந்நிலையில் விஐபிகளின் கார்களில் சைரன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கிரண் பேடி. இந்த உத்தரவு கிரண் பேடியின் பாதுகாவலர்களின் வாகனங்களுக்கும் பொருந்தும்.

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

விஐபிகள் என்பதால் அவர்களுக்கு என்று இனி எந்தவித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஐபிகள் சாலைகளில் கார்களில் செல்கையில் அவர்களின் வசதிக்காக எந்த இடத்திலும் போக்குவரத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் கிரண் பேடி.

புகார் நேரம்

புகார் நேரம்

தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அரசு உயர் அதிகாரிகளை பொதுமக்கள் சந்தித்து புகார் அளிக்கலாம் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் 6 மணி வரை எந்த அலுவலக கூட்டங்களும் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ்ஆப் குரூப்

வாட்ஸ்ஆப் குரூப்

தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், ஐஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்ந்துள்ளார் கிரண் பேடி. மக்கள் அளிக்கும் புகார்களை அந்த குரூப்பில் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+