Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுக... பிரதமருக்கு கிரண்பேடி வலியுறுத்தல்!

காவிரி மேலாண்மை வாரியம் காரைக்கால் விவசாயிகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதால் அதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை..

    புதுச்சேரி : காவிரியின் கடைமடையான காரைக்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் சிறக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : உச்சநீதிமன்றம் அண்மையில் காவிரி நீரால் பாசன வசதிகள் பெறும் மாநிலங்கள் தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் காவிரி நீரின் கடைமடைப் பகுதி. காரைக்காலில் நடைபெறும் விவசாயப் பணிகள் அனைத்துமே காவிரி நீரை நம்பியே உள்ளது. காவிரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கடைமடைக்கு நீர் வந்து சேருவதில்லை.

    விவசாயம் கேள்விக்குறி

    விவசாயம் கேள்விக்குறி

    இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே காரைக்கால் பகுதியில் விவசாயம் குறைந்துள்ளதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 7 டிஎம்சி நீரானது ஒதுக்கப்பட்டுள்ளது.

    வாரியம் கட்டாயம்

    வாரியம் கட்டாயம்

    இந்த நீர் முறையாக திறந்து விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டியது கட்டாயமாகிறது. உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் மத்திய அரசு காவிரி நீர் பகிர்வை சுமூகமாக மேற்கொள்ள 6 வார காலத்திற்குள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956படி குறிப்பிட்டுள்ளனர்.

    தாமதத்தால் அசாதாரண நிலை

    தாமதத்தால் அசாதாரண நிலை

    உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் மேலும்ம 3 மாத கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று காரைக்கால் விவசாயிகள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். தற்போது உச்சநீதிமன்றத்தின் மூலம் அந்த தீர்ப்பு கிடைத்த நிலையில் கால நீட்டிப்பு கோருவதால் விவசாயிகள் மத்தியில் அசாதாரண சூழலை ஏற்படுத்துகிறது.

    பிரதமர் உத்தரவிட வேண்டும்

    பிரதமர் உத்தரவிட வேண்டும்

    எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கிரண்பேடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+