புதுவையில் மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் கைது– மைனர் பெண்ணும் உடந்தை!
புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மைனர் பெண் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் குழந்தைகள் ஹெல்ப் லைன் அமைப்பில் புகார் கொடுத்தனர்.
அதில் தங்களை ஒரு கும்பல் மிரட்டி அடிக்கடி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறியிருந்தனர்.
வழக்குப் பதிவு:
இது குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார், டிஜிபி காமராஜிடம் புகார் அளித்தார். டிஜிபி உத்தரவின் பேரில் புகாரை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
5 பேர் கைது:
பள்ளி மாணவிகளை பண ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளி, அதனை ஆபாச வீடியோ படம் எடுத்து மிரட்டி மாணவிகளை அடிக்கடி விபசாரத்தில் தள்ளிய அருள்மேரி , புஷ்பா, மாணிக்கம், ரகுமான், 14 வயது மைனர் பெண் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.
செல்போன் விசாரணை:
புஷ்பாவின் செல்போனுக்கும், புகார் அளித்த பள்ளி மாணவிகளின் செல்போனுக்கும் அடுத்தடுத்த நேரத்தில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர்.
மைனர் பெண்ணும் உடந்தை:
செல்போன் எண் முகவரியை வைத்து விசாரித்தபோது புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணும் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் முதலில் புஷ்பாவிடம் சிக்கி விபசாரத்தில் ஈடுபட்டார்.
ஆசை காட்டி மோசம்:
பின்னர் சக வயதுடைய பள்ளி மாணவிகளை நண்பர்களாக்கி அவர்களிடம் பாலியல் தொடர்பான ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். புரோக்கர் புஷ்பாவிடம் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
பணத்தால் வந்த வினை:
இதனை பயன்படுத்திக்கொண்ட புஷ்பா மாணவிகளுக்கு ஆடம்பர செலவு செய்தும், பணத்தின் மீது அதிக ஆசை ஏற்படுத்தி ஏமாற்றியுள்ளார். தகாத உறவு வைத்துக்கொள்ளும்படியும் கட்டாயப்படுத்தப்படுத்தியுள்ளார். பண ஆசையால் பள்ளி மாணவிகள் விபசாரத்தில் விழுந்தது தெரியவந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்:
பள்ளி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக மைனர் பெண்ணை போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மைனர் பெண்ணின் குழந்தை:
மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 14 வயது மைனர் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தை தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முழுநெட்வொர்க் தகவல்கள்:
சிபிசிஐடி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், முதலில் 5 பேரும் தற்போது 14 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் விபசார புரோக்கர் புஷ்பாவின் முழு நெட்வொர்க் பற்றிய பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் போலீஸார்:
இதில் புதுவையை சேர்ந்த 25 முக்கிய பிரமுகர்களும், தமிழகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் பட்டியல் நீள்வதால் சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications