புதுவை அறிவியல் மையம், கோளரங்கத்துக்கு அப்துல்கலாம் பெயர்: முதல்வர் ரங்கசாமி
புதுவை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் புதுச்சேரியில் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்துக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய சிறப்புரை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்றென்றும் நமது பாசத்திற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர். அவர் நமது மனதிலும், சிந்தனையிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவருடைய சிந்தனைகள் நமது நாட்டினை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.
அவருடைய அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பங்கினை நினைவுகூறும் வகையில் லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.