புதுகையில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி காயம்
Subscribe to Oneindia Tamil
புதுகை: புதுக்கோட்டையில் கல்லூரி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையமருகில் அரசு மகளிர் கலைகல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கல்லூரியின் வகுப்பறை ஒன்றின் மேல்கூறையில் உள்ள ரூப் காங்ரீட் தலையில் பெயர்ந்து விழுந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அழகுமதி காயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இச்சம்பவத்தால் கல்லூரியில் மாணவிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications