For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுகையில் பிரபல ரவுடி பட்டு குமார் வெட்டிக் கொலை – போலீஸ் விசாரணை

Google Oneindia Tamil News

புதுகை: புதுக்கோட்டையில் பிரபல ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்தவர் பட்டு என்ற பெண் சாராய வியாபாரி. இவரும், இவருடைய மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பின் பட்டுவின் மகன் குமார் புதுக்கோட்டையில் ரவுடியாக வலம் வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் புதுகை சந்தைப் பேட்டையில் அமைந்துள்ள பழைய இரும்புக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு மர்மக்கும்பல் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்செய்தி புதுகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமாருக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையேயான் முன்விரோதத்தால் இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Pudukkottai rowdy was killed by some unknown murderer yesterday. Police filed case and investigated about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X