அமைச்சர் விஜயாபாஸ்கர் கல் குவாரியில் சோதனை- அதிகாலையிலேயே வேட்டை ஆரம்பம்-வீடியோ
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்தே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை கல்குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அதனையடுத்து, விஜயபாஸ்கர் வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 5 மணிநேரம் கேள்வி கேட்டு தீவிரமாக விசாரித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமாக கல்குவாரி உள்ளது. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையிலேயே சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.