Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை...அதிகாரி காலில் விழுந்து கதறி புகார் கொடுத்த கணவர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: பாலியல் தொல்லை காரணமாக ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியையின் கணவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.

இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக மதிவாணன் உள்ளார். இவர் புவனேஸ்வரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, கடந்த 7ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

pudukottai : Sex complaint against headmaster

இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான தலைமையாசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் தெற்கு ராயபட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

மனு அளித்த போது புவனேஸ்வரியின் கணவர் அருள் முருகனின் காலில் விழுந்து கதறி அழுததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+