ஓ.பி.எஸ். என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை: புகழேந்தி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை என்று கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.

Pugalenthi Criticism about ops

இந்நிலையில் மதுரை மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி தலைமை தாங்கினார். இதில் நாஞ்சில் சம்பத், கர்நாடகா அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய புகழேந்தி, டிடிவி தினகரன் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சென்று விடும் என்ற பயத்தில் தான் அவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது ஏன் புகைப்படத்தை வெளியிட வில்லை என கேட்கிறார்கள். ஜெயலலிதா சிகிக்சைக்காக அப்பல்லோவில் இருந்த போதே 300 பேர் உயிரிழந்தாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+