சென்னை புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி.. பணிச்சுமையா என விசாரணை
புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ
சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணி புரிந்துவருபவர் சந்தோஷ்குமார்.

இந்நிலையில், இவர் இன்று காலை ராயபுரம் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்க நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சந்தோஷ்குமார் தற்கொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சந்தோஷ்குமாருக்கு பணிச்சுமை அல்லது குடும்ப தகராறு போன்ற காரணங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications