காதல் பிரச்சினை... சென்னை அருகே புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டிக் கொலை
சென்னை: காதல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாம்பரம் அருகே புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான நபரின் பெயர் ராஜா (37) என்பதாகும். இவர் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி சாலையில் வசித்து வந்த ராஜா புரட்சி பாரத மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரியா (18), பிரதீபா, பிரியதர்ஷினி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

ராஜாவின் மகள் பிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமாரின் மகன் லோகேசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவருவரின் காதலால் இரு வீட்டாருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 2 மாதத்திற்கு முன்பு ராஜாவிற்கும், சம்பத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சம்பத்குமாரை ராஜா வெட்டினார். இதனையடுத்து பீர்க்கங்கரணை போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் வீட்டு அருகே உள்ள ஹோட்டலில் ராஜா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் புகுந்தனர். ஓட்டல் உரிமையாளர் குமார் உள்பட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி வெளியேற்றினர். பின்னர் ராஜாவை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் பயங்கரமாக வெட்டியது. உடல் முழுவதும் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராஜா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் கொலைக் கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றது.
சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கங்கரணை போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காதல் பிரச்சினையில் ராஜாவிற்கும், சம்பத்குமாருக்கும் இடையே நடந்த மோதலின் தொடர்ச்சியாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகள் கூலிப்படையா? அல்லது சம்பத்குமாரின் உறவினர்களா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த ஓட்டல் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications