கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வீரலட்சுமியை விட்டுட்டு போய்ட்டீங்களே பாஸ்!
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு முதல் ஆளாக வந்து ஆதரவு கொடுத்தவர் தமிழர் முன்னேற்றப் படையின் கி. வீரலட்சுமி. கடைசியில், விஜயகாந்த்தைப் பா்க்கப் போனபோது வீரலட்சுமியை உடன் கூட்டிச் செல்லாமல் தனியாகப் போய் தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொண்டு விடடனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இ்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்ந்து அமைத்த கூட்டணிதான் மக்கள் நலக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் இது நாள் வரை இந்த நாலு கட்சிகள் மட்டுமே இருந்து வந்தது.

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்தது மக்கள் நலக் கூட்டணி. இந்த நிலையில் நேற்று வைகோவை, தமிழர் முன்னேற்றப்படை என்ற குட்டிக் கட்சியின் தலைவரான கி.வீரலட்சுமி தனது தொணடர்களோடு திரண்டு வந்து சந்தித்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.
வைகோவும் இதுகுறித்து நீண்டதொரு அறிக்கை விட்டு கி.வீரலட்சுமியின் ஆதரவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளது மக்கள் நலக் கூட்டணி.
அடடா.. மறந்துட்டோமே பாஸ்!












Click it and Unblock the Notifications