கலவரத்தில் காவல்துறை அத்துமீறல்.. நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை.. மநகூ அறிவிப்பு
சென்னை கலவரத்தில் காவல்துறையினர் அத்துமீறியது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மநகூ அறிவித்துள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் மநகூ தலைவர்கள் தெரிவித்தனர்.
சென்னை: நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் வன்முறை கலவரம் வெடித்தது. இந்த வன்முறையின் போது பொதுமக்களை அடிப்பது, வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைப்பது என அத்துமீறலில் ஈடுபட்டதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, சென்னையில் நடைபெற்ற வன்முறையில் காவல்துறையினரே அத்துமீறியுள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறினார்கள். மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் மநகூ தலைவர்கள் வெளியிட்டனர். வன்முறையை நியாயப்படுத்த போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
சென்னை கலவரம் குறித்தும் போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் மநகூ சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து ஜன. 28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்றும் மநகூ தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications