ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்கிறதா? வங்கிகளில் நீண்ட கியூ.. நேரடி காட்சிகள்
சென்னையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் ஏடிஎம் மையங்களில் இன்று பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்படவில்லை.
சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலை 5 மணியில் இருந்தே ஏடிஎம் மையங்களின் வாசலில் மக்கள் காத்திருந்தனர். பல ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பணம் எடுக்கச் சென்ற பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் கால்கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தும் சிலருக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. இப்போது நாம் ஒரு ஏடிஎம் வாசலில் நிற்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் நேரலையில் பாருங்கள்.
இடம்: மயிலாப்பூர் கச்சேரி சாலை, கரூர் வைஸ்யாபேங்க்
இடம்: சென்னை மயிலாப்பூர், கச்சேரி சாலை












Click it and Unblock the Notifications