சென்னையில் குடியரசு தினவிழா... முதல்வர் ஜெ முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றினார்!
சென்னை: சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன. தமிழக அரசு சார்பில் மெரீனாவில் நடந்த குடியரசு தின விழாவில், ஆளுநர் ரோசய்யா பங்கேற்று கொடியேற்றி வைத்தார்.
நாட்டின் 67 வது குடியரசு தின விழா இன்று காலை தலைநகர் சென்னையில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து வரவேற்றார். அவரை கொடியேற்றும் மேடைக்கு அழைத்துச் சென்று முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட வைத்தார்.
பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் ரோசய்யா. அவருடன் முதல்வர் ஜெயலலிதாவும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
முப்பைடைகளின் சார்பில் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அதனை ஆளுநரும் முதல்வரும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications