ஏப். 12ல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன

ஜெயலலிதா மரணமடைந்ததால் ஏற்பட்ட காலியான ஆர்.கே. நகரில் அடுத்தமாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா.

R.K. Nagar by-election, code of contact came to force immediately

உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பாமலேயே டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலத்த எதிர்ப்பார்பிற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மார்ச் 23ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மாவட்டம் முழுவதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டம் முழுவதற்குமே அரசு திட்டங்களை அமல்படுத்த முடியாது. மேலும், அமைச்சர்களின் பயணம், வாகன பிரச்சாரம், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் என எதையும் மாநில அரசு செய்யக் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+