வேட்பு மனு தாக்கல் டைம் ஓவர்.. விஷாலுக்கு டோக்கன் கொடுத்து உட்கார வைத்த அதிகாரிகள்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயேச்சையாக டிடிவி தினகரன், விஷாலும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய தண்டையார்பேட்டை அலுவலகத்துக்கு வந்துள்ளார். சினிமா பிரபலம் என்ற அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் அனுப்பக் கூடாது என்று சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 110 பேர் வந்துள்ளதால் நேரத்தை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர். மாலை 3 மணிக்குள் வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் தந்துள்ளனர். 68-ஆவது எண் டோக்கன் பெற்ற விஷால் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்.
டோக்கன் பெற்றுள்ள அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய இரவு 8 மணி ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நாளை பரிசீலனை செய்வர். வேட்புமனுக்களை வாபஸ் பெற 7-ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் 7 முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆர்.கே.நகரில் குத்தாட்டம், கொண்டாட்டம் என தேர்தல் பிரச்சாரம் களைக் கட்ட தொடங்கிவிட்டது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications