Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரைக்குடியில் பொங்கல் வைக்கும் ராதிகா, சரத்குமார்.. மாட்டு வண்டியில் வருகிறார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கல் கட்சித் தலைவர் சரத்குமார், அவரது மனைவியும் மகளிர் அணி செயலாளர் ராதிகாவும் சேர்ந்து ஜனவரி 15ம் தேதி காரைக்குடியிலும், 16ம் தேதி திருவாடானையிலும் சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ளனர்.

கிராமியக்கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவில் 500 க்கும் மேற்பட்ட பெணகள் ராதிகா தலைமையில் ஒரே இடத்தில் புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் வைக்கும் பெண்களுக்கு பொங்கல் பானை, அரிசி, வெல்லம் உள்பட அனைத்து பொருட்களும் கட்சி நிர்வாகிகளால் இலவசமாக வழங்கப்படுகிறது.

Radhika Sarathkumar to lead AISMK's samathuva Pongal in two towns

சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்கும் பெண்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட உள்ளது.

மாட்டு வண்டியில் பவனி வரும் ராதிகா, சரத்குமார்

பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் சரத்குமாரும், ராதிகாவும் மாட்டுவண்டியில் வருவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் காரைக்குடி, திருவாடானை பகுதி அரிமா சங்கம், வணிகர் சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

சொந்த மாவட்டத்தில்

ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர் சரத்குமார் என்பது இதில் "பொங்கல் போனஸ்" தகவல்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+