முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்.. ராகுல் காந்தி வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் பூரண நலத்துடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்.
My prayers are with Jayalalithaa ji. I wish her a complete and speedy recovery
— Office of RG (@OfficeOfRG) October 3, 2016
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தற்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications