ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் தலைவர் - ராகுல் காந்தி புகழாஞ்சலி #Jayalalithaa
நாடு மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவரை இழந்து தவிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி , குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர். ராஜாஜி மாஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு ராகுல் காந்தி ,குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சித்துணை தலைவர் ராகுல்காந்தி, பா.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குலாம் நபி ஆசார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாடு மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்து தவிக்கிறது என்று புகழாரம் சூட்டினார்.












Click it and Unblock the Notifications