ராகுலை பார்த்தாலே மோடிக்கு அல்லுவிடுதா?.. குஷ்பு சரமாரி கேள்வி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: டெல்லியில் 69வது குடியரசுத் தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தற்போது இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மரியாதை
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன பின் நடக்கும் முதல் குடியரசுத் தின கொண்டாட்டம் இது. இதுவரை ராகுல் காந்தி எப்போதும் முதல் வரிசையில் உட்காரவைப்பட்டு இருந்தார். அதேபோல் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு எப்போது முதல் வரிசை கொடுக்கப்பட்டு மரியாதையை அளிக்கப்பட்டு வந்தது.

முதல் தடவை
காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவிற்கு வந்த பின் இந்த முறைதான் இவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அதேபோல் முதல் வரிசையில் ராகுலும், சோனியாவும் அமராமல் போனது இதுவே முதல்முறையாகும். இது கட்சியினர் இடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
|
மீறல்
அதேபோல் எப்போதும் எதிர்க்கட்சி தலைவர் முதல் வரிசையில் உட்கார வைக்கப்படவேண்டும். அதுவே விதி. இந்த குடியரசு தின விழாவில் அந்த விதி மீறப்பட்டு இருக்கிறது. அவருக்கு நான்காவது வரிசை கொடுக்கப்பட்டது விதி மீறல் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

குஷ்பு
இதுகுறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் ''வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக 4வது வரிசையில் இடம் கொடுத்து இருக்கிறது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று இப்படி செய்துள்ளது. ராகுல் காந்தி அங்கு இருப்பது கூட மோடிக்கு இவ்வளவு பயத்தை கொடுக்கிறதா?. ஆனால் ராகுல் எப்போதும் நாட்டிற்கு தன் மரியாதையை செலுத்துவார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications