For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலை பார்த்தாலே மோடிக்கு அல்லுவிடுதா?.. குஷ்பு சரமாரி கேள்வி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் 69வது குடியரசுத் தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தற்போது இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்பக்க இருக்கை கொடுக்கப்பட்டது குறித்து குஷ்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மரியாதை

மரியாதை

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன பின் நடக்கும் முதல் குடியரசுத் தின கொண்டாட்டம் இது. இதுவரை ராகுல் காந்தி எப்போதும் முதல் வரிசையில் உட்காரவைப்பட்டு இருந்தார். அதேபோல் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு எப்போது முதல் வரிசை கொடுக்கப்பட்டு மரியாதையை அளிக்கப்பட்டு வந்தது.

முதல் தடவை

முதல் தடவை

காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவிற்கு வந்த பின் இந்த முறைதான் இவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அதேபோல் முதல் வரிசையில் ராகுலும், சோனியாவும் அமராமல் போனது இதுவே முதல்முறையாகும். இது கட்சியினர் இடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மீறல்

அதேபோல் எப்போதும் எதிர்க்கட்சி தலைவர் முதல் வரிசையில் உட்கார வைக்கப்படவேண்டும். அதுவே விதி. இந்த குடியரசு தின விழாவில் அந்த விதி மீறப்பட்டு இருக்கிறது. அவருக்கு நான்காவது வரிசை கொடுக்கப்பட்டது விதி மீறல் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

குஷ்பு

குஷ்பு

இதுகுறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் ''வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக 4வது வரிசையில் இடம் கொடுத்து இருக்கிறது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று இப்படி செய்துள்ளது. ராகுல் காந்தி அங்கு இருப்பது கூட மோடிக்கு இவ்வளவு பயத்தை கொடுக்கிறதா?. ஆனால் ராகுல் எப்போதும் நாட்டிற்கு தன் மரியாதையை செலுத்துவார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Kushboo Sundar says in Facebook ''Giving fourth row to Cong President Rahul Gandhi during the Republic Day parade is a deliberate attempt by the BJP to humiliate and insult him...even Rahulji's presence gives your so much of insecurity Narendra Modi? But Rahul Gandhi shall honor and will be present to salute the Nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X