விஜயகாந்த் தனியாக போட்டியிட்டால் ஓட்டுகள் சிதறி விடும்... எஸ்.வி.சேகர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்திற்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவெடுக்க வேண்டும். அவர் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தியுள்ளார். ஊழல் எதிர்ப்பு எண்ணம் இருப்பதால் தான் அவர் மாநாட்டை நடத்தி உள்ளார்.
அவர் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டால் ஓட்டுகள் சிதறி விடும். இதனால் விஜயகாந்த் சரியான முடிவு எடுத்து பாஜக கூட்டணியில் சேர வேண்டும். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தால் அங்கும் பிரச்சினை உள்ளது. இதனால் அந்த கட்சியுடன் சேர்ந்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது.
வரும் தேர்தலில் பாஜக 272 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
ராகுல் காந்தி பேட்டி, பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி அவர்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்.
பாரதிய ஜனதா கட்சிக்காக நான் இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன். தமிழர்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரச்சாரம் செய்வேன். இதற்காக மோடியிடமும் பேசிவிட்டேன். பிரச்சாரம் செய்ய அழைத்தால் நிச்சயம் வருவேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications