இளைஞர்களின் உணர்வுகளைப் புரிந்த ஒரே தலைவர் ராகுல் தான்.. சுதர்சன நாச்சியப்பன்

விழுப்புரத்தில் நடந்த அகில இந்திய மனித உரிமைப் பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாச்சியப்பன் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கடைசி கட்டத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது திமுகவுக்கு புதிதல்ல. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றன. அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து தனி ஈழத்திற்காகவோ, தமிழர்களுக்காகவோ குரல் கொடுத்தார்களா?.
பிரபாகரன் இலங்கையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ராஜீவ்காந்தி 13வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். கடந்த 5 ஆண்டுக்கும் மேல் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்ற திமுக, தனி ஈழத்திற்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறினார்களா?.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஏ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் காரணம் அல்ல. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்று கூறினீர்கள். அதற்கு பிறகு ஏன் ஓட்டுக்காக எங்களை வந்து சந்தித்தீர்கள்?.
சோனியாகாந்தி கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சி.
லோக்சபா தேர்தலில் தனித்து நிற்போம் என்று நினைத்து தற்போது இருந்தே பணியாற்ற தொடங்குங்கள். இளைஞர்களின் உணர்வை புரிந்து கொண்ட ஒரே தலைவர் ராகுல்காந்தி. அவர்தான் அடுத்த பிரதமர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications