நாடு முழுவதும் அதிரடி ரெய்டு... ரூ. 2 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.2 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு எமனாக வந்திறங்கியிருக்கிறது சீனா பட்டாசுகள்.. இதன் வருகையால் வழக்கமான ஆர்டர்கள் சிவகாசிக்கு கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீனா பட்டாசுகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டும் உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ரூ2 கோடி மதிப்பிலான சீனா பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications