கட்டண உயர்வை எதிர்த்து தூத்துக்குடியில் ரயில் மறியல் -60 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: ரயில் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் ரயில் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வழிமறித்து போராட்டம் செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று கோவில்பட்டியில் ரயில் மறியல் செய்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications