ஓடும் ரயிலில் பெண் கை துண்டான சம்பவம்: சாட்சி சொல்ல கூட முன்வராத சக பயணிகள்
மதுரை: ரயிலில் பயணித்தபோது, அறிவிப்பு பலகை விழுந்து பெண்மணி கை துண்டானது. இதுகுறித்து சாட்டியம் சொல்ல சக பயணிகள் யாருமே முன்வர மறுத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் மகாலட்சுமி (22). இவர் கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லைக்கு சென்றார்.

விருதுநகர்- சத்திரப்பட்டி அருகே ரயில் வந்தபோது தண்டவாள வளைவில் இருந்த எச்சரிக்கை பலகை சாய்ந்து விழுந்தது. இதில் ஜன்னலுக்கு வெளியே தொங்க விட்டிருந்த மகாலட்சுமியின் வலது கை துண்டானது. இதனால் சக பயணிகள் பீதியடைந்து சத்தம் போட்டனர். ரயில் நிறுத்தப்பட்டு, மகாலட்சுமி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகக்காக சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் நேற்று சிறப்பு ரயிலில் வந்து விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளப் பகுதியில் விழுந்து கிடந்த எச்சரிக்கைப் பலகை கம்பத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த ஆய்வின்போது பிற உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகாலட்சுமியிடம் நேரில் சென்று ஆணையர் விசாரணை நடத்தினார். பின்னர் மதுரையிலுள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் விசாரணை நடந்தது.
ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில்வே தளவாடப்பொருட்கள் பராமரிப்பு பிரிவு, பொறியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், அனந்தபுரி ரயிலில் பயணித்த பயணிகள் சிலருக்கும் விசாரணையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் விசாரணைக்கு வரவில்லை. எனக்கென்ன வந்தது என்று அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications