சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் டிச.5 வரை மூடல்- அனைத்து ரயில்களும் ரத்து!!
சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் டிசம்பர் 5-ந் தேதி வரை மூடப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும் அத்தனை ரயில்களும், சென்னை வரும் அத்தனை ரயில்களும் நாளை மறுநாள் டிச.5-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
100 ஆண்டுகாலம் காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிக் கிடக்கிறது. அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கிப் போயுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை நகரம் தமிழகத்தின் இதரபகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளநீர் வடியாததால் மேலும் 2 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படுகிற அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் வழியாக செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் டிசம்பர் 5-ந் தேதிவரை ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications