சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில்கள் நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்!
சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில் நிலையங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது பயணிகளை பதற வைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 ரயில் நிலையங்கள் மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால் ரயில் கட்டணத்தையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அபாயம் இருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நவீனமயமாக்கல் என்ற பெயரில் நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை என 25 ரயில் நிலையங்கள் அப்படியே தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

அத்தனை வசூலும்...
இதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் ப்ளாட் பார்ம் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை தாங்களே வசூலிப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பார்களும் வைப்பார்களாம்...
அத்துடன் ரயில் நிலையங்களில் மதுபான பார்கள் அமைக்கவும் இந்நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த கோரிக்கைகள் பலவற்றை ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

கட்டண நிர்யணம் உரிமை?
இதன் உச்சகட்டமாக ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை கோரவும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் ரயில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்கிற பீதி பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்
இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை கட்ட தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் பல லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications