வெப்பச்சலனம் தொடர்கிறது.. ஓரிரு நாட்களுக்கு மழை நீடிக்கும்– வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்னும் ஓரிரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக சென்னையில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் ஆலங்கட்டியும் மழையும் பெய்திருந்தது.
3 நாட்களாக பெய்து வந்த மழையால் சென்னை சிறிதளவு குளிர்ந்து போய் உள்ளது. நேற்று பெரிய அளவில் மழை இல்லை. சில பகுதிகளில் மட்டும் மழை மாலை மற்றும் இரவில் காணப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் ஓரிரு நாட்கள் மழை நீடிக்கும்.
சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications